குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Tuesday, September 13, 2011

"துஆக்களின் தொகுப்பு முதல் பாகம்"

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக!..............................

நம்மை படைத்து பாதுகாப்பவனாக இருக்கும்
இறைவனால் இறைக்கியருளப்பட்ட குர்ஆனிலிருந்து துஆக்களின் தொகுப்பு முதல் பாகம் இங்கே தரப்படுகின்றது. இந்த துஆவை நாம் அதிகம் ஓதுவதின் மூலம் இறைவனின் கருனையைப் பெற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
அல்ஹம்துலில்லாஹ்!...

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸுலுஹி ஸ்ய்யிதினா முஹம்மதின் வஆலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7

رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128


“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201

نَرَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِي

“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250

سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.

اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26

رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” 3:38

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” 3:53

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”. 3:147

رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

“எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!” 5:83

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

“எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”. 7:89

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126

لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

“எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:149

وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ

“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156

حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” 10:85

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ

“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” 10:86

"துஆக்களின் தொகுப்பு முதல் பாகம்"

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்


நம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக!..............................


நம்மை படைத்து பாதுகாப்பவனாக இருக்கும்

இறைவனால் இறைக்கியருளப்பட்ட குர்ஆனிலிருந்து துஆக்களின் தொகுப்பு முதல் பாகம் இங்கே தரப்படுகின்றது. இந்த துஆவை நாம் அதிகம் ஓதுவதின் மூலம் இறைவனின் கருனையைப் பெற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

அல்ஹம்துலில்லாஹ்!...

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸுலுஹி ஸ்ய்யிதினா முஹம்மதின் வஆலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.


إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ


(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. 1:5-7


رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ


“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128



“ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201


نَرَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِي


“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250


سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ


எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”. 2:285


رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ


“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:286


رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ


“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8


رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ


“எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” 3:16.


اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ


“அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26


رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ


“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” 3:38


رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ


“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” 3:53


رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ


“எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”. 3:147


رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ


“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194


رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ


“எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!” 5:83


رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ


“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:23


رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ


“எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”. 7:89


رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ


“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126


لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ


“எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”. 7:149


وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ


“இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” 7:156


حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ


“எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129


عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ


“நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” 10:85


وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ


“(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” 10:86


Saturday, September 10, 2011

நூல் வெளீயிடு

Friday, September 9, 2011

இறையருளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு..

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து 'வா!' என்றாள். அதற்கவர் ''அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்'' எனக் கூறினார். திருக்குர்ஆன் 12: 23...

கடந்த எமது இறைநம்பிக்கைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்ற தலைப்பில் ஷைத்தானுடைய சதித்திட்டத்தில் பாவம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இறுதிக்கட்டத்தில் இறைவன் அதிலிருந்து தடுத்து விடுவான் என்பதற்கு பனூ இஸர்வேலர்கள் காலத்தில் வாழ்ந்த இரண்டு இறைநம்பிக்கையாளர்களுடைய சம்பவத்தை மேற்கோள் காட்டி எழுதி இருந்தோம்.

இந்தக் கட்டுரையில் இறைத்தூதர் ஒருவரை விடாமல் விரட்டிய ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்து இறைவன் தனது அருளால் அவரை மீட்டெடுத்த சம்பவத்தை பார்ப்போம்.

அழகின் பொக்கிஷம் யூசுஃப் (அலை) அவர்கள்
யூசுஃப் (அலை) அவர்கள் சிறுவயதாக இருந்த பொழுது அவர்களுடைய தந்தை யாக்கூப் (அலை) அவர்கள் அவர் மீது அதிகப் பிரியமுள்ளவராக இருந்தார்கள் இதை சகித்துக்கொள்ள முடியாத யூசுஃப் (அலை) அவர்களுடைய பிற சகோதரர்கள் அவரை அழைத்துச்சென்று கிணற்றில் இறக்கினார்கள் அவ்வழியே வந்தப் பயணிகளில் ஒருவர் தண்ணீருக்காக வாளியை கிணற்றில் விடவே கிணற்றுக்கடியிலிருந்து சிறுவர் யூஸூஃப்(அலை)அவர்கள் மேல்நோக்கி சப்தம் கொடுத்து அதை செவியுற்றப் பயணியின் மூலம் இறைவனின் பேருதவியால் வெளியே வந்து விடுகின்றார்கள்.

சிறுவர் யூஸூஃப்(அலை)அவர்களை கிணற்றிலிருந்து வெளிக்கொண்டு வந்தப் பயணக்கூட்டம் எகிப்தில் ஒருவரிடம் அற்ப விலைக்கு விற்று விடுகின்றனர். அற்ப விலை கொடுத்து சிறுவர் யூசுஃப் (அலை) அவர்களை வாங்கியவர் தனது வீட்டில் வளர்க்கின்றார்

சிறுவர் யூசுஃப்(அலை) அவர்கள் வளர்ந்து வாலிபப் பருவத்தை அடைந்ததும் அவர்களின் அழகின் மீது அவரின் மனைவி ஆசைப்பட்டு அவரை அடையத் துடிக்கின்றார்.

சிலர் (அதிகமானோர் அல்ல) இப்படித்தான் விளக்கொளியின் பிரசாசத்தில் விழும் விட்டில் பூச்சிகளைப் போன்று குணம், குலம், கோத்திரம், வயது வித்தியாசம் எதையும் தெரிந்து கொள்ளாமல் அழகில் மட்டும் மயங்கி விடுவார்கள்.
இவ்வாறு அவசரமாக மனதை பறிக் கொடுத்தவர்கள் அவசரமாக மானத்தையும் இழப்பதற்கு துணிந்த விடுவார்கள் ஏமாற்றப்பட்டதும் உயிரையும் மாய்த்துக் கொள்வார்கள். மிகச் சிலர் மட்டுமே இதில் விதிவிலக்காக இதை (மானமிழந்ததை )டேக் இட் ஈசி யாக எடுத்துக்கொள்வார்கள்.

இதில் பெரிய இடத்துப் பிள்ளைகள் செய்யும் சிஷ்மிஷன்கள் வெளியில் தெரிந்தால் பெரிய குடும்பத்து கௌரவம் காற்றில் பறந்து விடக்கூடாது என்பதற்காக எதிராளியை மாட்டிவிட்டு தப்பித்துக் கொள்வார்கள், அதற்காக முன்கூட்டியே சில திட்டங்களை செட்டப் செய்து வைத்துக் கொள்வார்கள்.
யூசுஃப்(அலை)அவர்களின் அழகினால் கவரப்பட்டப் பெண்ணும் இதுப்போன்றதொரு மெகா செட்டப்பை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தார்.

ஒருநாள் இன்று எப்படியாவது இவரை அடைந்தே தீருவது என்ற முடிவுக்கு வந்து வாசல் கதவுகளையும் தாழிட்டு விட்டு வற்புருத்தத் தொடங்கினார் எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து 'வா!' என்றாள். ... திருக்குர்ஆன் 12: 23
உடன் பிறந்தவர்களால் வஞ்சிக்கப்பட்டு பாலுங்கிணற்றில் வீசி எறியப்பட்டவரை வெளிக்கொண்டு வரச்செய்து அவர் வளர்ந்து ஆளாவதற்கு அழகிய தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஏகஇறைவனுக்கு நன்றி மறப்பதற்கும், இத்தனை வருடங்களாக வளர்த்தெடுத்த தனது எஜமானனுக்கு அநீதியிழைப்பதற்கும் துணிய மறுத்த யூசுஃப் (அலை) அவர்கள் முதலில் இறைவனிடம் பாதுகாப்புக் கோரி விட்டு அந்தப் பெண்ணுடைய மனதை மாற்றி விடுவதற்காக அந்த நேரத்தில் அழகிய சொற்களைக் கொண்டு உபதேசம் (தஃவா) செய்கின்றார்.

இன்று நாம் பார்க்கி;ன்றோம் ஹவுஸ் பாய், ஹவுஸ் டிரைவர், போன்றவர்களை தொழிலாளியாகப் பார்க்காமல் உறவினர் போல் கருதி தங்களுடைய வீடுகளில் குடியமர்த்திக் கொள்ளும் எஜமானர்களுடைய வீடுகளில் இதுபொன்றதொரு வெறுக்கத்தக்க சம்பவம் நிகழுமானால் நான் என் இறைவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன், என் எஜமானனுக்கு அநீதியிழைக்க விரும்பவில்லை என்றுக் கூறி யாராவது விலகிக் கொள்கின்றனரா ? இதை விடக் கொடுமை அங்கே ஒன்றும் நடக்கவில்லை என்றாலும் கூட நடந்ததைப் போன்று வெளியில் வந்து தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களையேப் பார்க்கின்றோம். இறையச்சமும், மறுமை நம்பிக்கையும் அற்றுப் போனதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

யூசுஃப்(அலை) அவர்கள் செய்த உபதேசத்தை அந்த நேரத்தில் அந்தப் பெண்ணால் ஜீரணிக்க முடியவில்லை அதனால் அவைகளைப் புறக்கனித்து விட்டு அவரை மயக்கும் கலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

பெண்கள் பருவம் அடைவதற்கு முன்னரே முடிந்தளவு ஏகஇறைவனின் ஏவல் - விலக்கல் சட்டங்களை எத்தி வைத்து விடவேண்டும் முத்தி விட்டால் எத்தி வைப்பது எடுபடாமல் போய்விடலாம் என்பதற்கு மேற்காணும் யூசுஃப்(அலை) அவர்களை விடாமல் விரட்டிய அந்தப் பெண் ஒருக்கெட்ட உதாரணமாகும்.
யூசுஃப்(அலை) அவர்கள் செய்த உபதேசங்கள் எடுபடாமல் போனதுடன் நேரம் ஆக ஆக அவர்களுடைய மனநிலையில் அப்பெண்ணின் மயக்கும் கலைகளால் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடிவிட்டார்... பெரும்பாலும் இப்படி நடக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன காரணம் அன்னிய ஆண் - பெண் இருவர் தனித்திருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்களுடன் ஷைத்தான் மூன்றாவதாகி விடுவான். என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் (திர்மிதீ 1091)

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் மட்டுமே அனைத்து விதமான குற்றங்களுக்கும் அப்பாற்பட்டவன் சாதாரண மனிதர்களிலிருந்து, அவனுடையத் தூதர்கள், நேசர்கள் வரை அனைவரும் தவறிழைக்கக்கூடியவர்களே அல்லாஹ் நாடினால் மட்டுமே அவனுக்கு விருப்பமானவர்களை பாவத்தில் நெருக்கி வைக்கும் குற்றச் செயலிலிருந்து காப்பாற்றுவான்.
யார் அவனுக்கு விருப்பமானவர்கள் ?

இத்துடன் முடிந்து விட்டது இனிநடக்கப் போவது ஒன்றுமில்லை என்ற அதிருப்தி அடையாமல் துன்பமே நிகழப்போகின்றது என்று உறுதியாகத் தெரிந்தாலும் இறைவன் எம்மைக் காப்பாற்றுவான் இறைவன் எமக்குப் போதுமானவன் என்று இறைவனிடம் பாதுகாப்புக் கோருபவர்கள்.

இங்கில்லை என்றாலும் இதற்காக இருமடங்கு நன்மையை மறுமையில் தருவான் என்ற மனவலிமை மிக்கவர்கள் அவனுக்கு விருப்பமானவர்கள் !
இப்படிப்பட்ட இறைநம்பிக்கையாளர்கள் ஒருநாள் ஷைத்தானின் சூழ்ச்சியில் வீழ்வதற்கு தயாராகும் போது, அல்லது செய்வதறியாது திகைத்து நிற்கும்போது அவர்கள் சரியான முடிவை மேற்கொள்வதற்காக உள்ளுணர்வை ஏற்படுத்தி இறைவன் அதிலிருந்து தப்பிக்கச் செய்து விடுவான். தன்னை அஞ்சி நல்லறங்கள் செய்வோருடனே அல்லாஹ் இருக்கிறான். அவள் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். திருக்குர்ஆன் 16:128

யூசுஃப்(அலை) அவர்களை அப்பெண் தவறான வழிக்கு அழைத்ததும் இன்று நாம் தொலைந்தோம் இவளுடையப் பிடியிலிருந்து தப்பிப்பது சிரமம் என்று நினைத்து அவநம்பிக்கை அடையாமல் ''அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். என்று இறைவனிடம் பாதுகாப்புக் கோரினார்கள்.
யூசுஃப்(அலை) அவர்கள் பாதுகாப்புக் கோரியப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இன்னும் சிறிதே நேரத்தில் யூசுஃப்(அலை) அவர்களுடைய எஜமானர் வீட்டுக்கு வரவிருப்பதையும், மேற்படி விஷயத்தில் மாட்டிக் கொண்டால் பழியை யூஸூஃப் (அலை) அவர்கள் மீதேப்போட்டு விடுவது என்று அப்பெண் முடிவு செய்து வைத்திருந்ததையும் முன்கூட்டியே அறிந்திருந்ததால் தனது அத்தாட்சியை யூஸூஃப் (அலை) அவர்களுக்கு காண்பிக்கச் செய்து அதிவேகத்தில் அங்கிருந்து அவரை இறைவன் ஓடச்செய்து விடுகின்றான், அவர் ஓடத் தொடங்கியதும் அப்பெண்ணும் அவரைப் பின் தொடர்ந்து ஓடி அவருடைய சட்டையைப் பிடித்து இழுக்க சட்டைக் கிழிந்து விடுகிறது. திருக்குர்ஆன் 12:25

அப்பெண்ணிடமிருந்து தப்பித்து ஓடியவர் வெளியில் ஓடுவதற்காக வாசலை நெருங்கிய பொழுது அவருடைய எஜமானன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து விடுகிறார் 12:25 அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர்.... திருக்குர்ஆன் 12:25

மாட்டிக் கொண்டால் இவரையே மாட்டி விடுவது என்று ஏற்கனவே அப்பெண் திட்டமிட்டிருந்தப்படி தனது கணவனை கண்டதும் உடனே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிடியுங்கள் அவரை நீங்கள் இல்லாத போது என்னை மானபங்கப் படுத்த முயற்சித்ததற்காக சிறையில் அடைத்து சித்ரவதை செய்ய உத்தரவிடுங்கள் என்று கர்ஜிக்கின்றார் . ''உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?'' என்று அவள் கூறினாள். திருக்குர்ஆன் 12:25

அப்பெண்ணை விட்டு அவர் ஓடுவதில் சிறிதேனும் காலதாமதமாகி இருந்தால் எஜமானனுடைய பார்வையில் யூசுஃப்(அலை) அவர்களே குற்றவாளியாக தெரிந்திருப்பார்கள் ஏன் என்றால் இவர் தான் என்னைக் கட்டாயப்படுத்தினார் என்று அப்பெண் கூறினால் அதுவே எடுபடுவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.
யூசுஃப்(அலை) அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை அவரது எஜமானன் உறுதிபடுத்திக் கொள்வதற்காக இறைவன் அவரது சட்டையின் பின்புறத்தை அப்பெண்ணின் கைகளில் சிக்கி கிழியச்செய்து விடுகிறான். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, ''இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது'' என்றார். திருக்குர்ஆன் 12:28

நடந்து முடிந்த வெறுக்கத்தக்க நிகழ்வுக்கு யார் காரணம் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட அவரது எஜமானர் அவரை நிரபராதி என்றுக் கூறி விட்டு தமது மனைவியின் சூழ்ச்சியை எடுத்துக்கூறி இறைவனை பயந்துகொள்ளும் படி உபதேசிக்கின்றார். '' யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!'' (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்). திருக்குர்ஆன் 12:29
துன்பமே நிகழப்போகின்றது என்று உறுதியாகத் தெரிந்தாலும் இறைவன் எம்மைக் காப்பாற்றுவான் இறைவன் எமக்குப்போதுமானவன் என்று இறைவனிடம் பாதுகாப்புக் கோரிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவன் பொறுப்பேற்றுக்கொள்வான் என்பதற்கு மேற்காணும்

இறைநம்பிக்கையாளராகிய யூஸூஃப்(அலை) அவர்களை இறைவன் தனது அருளால் அவர் மீதுப் பாவக்கரைப் படிவதற்கு முன் மீட்டெடுத்தச் சம்பவம் இறையருளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார். திருக்குர்ஆன் 12: 24.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


Saturday, December 18, 2010
க்ஃப்க்ஃப்க்க்

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்